August 03, 2012

பயங்கள் பற்றிய தகவலும் அதற்கு தீர்வும் தரும் இணையதளம்



 
உலகில் எந்த விஷயத்திற்கும் பயப்படாமல் இருக்கும் ஒருவரையாவது கண்டு இருக்கிறீர்களா? நிச்சயமாக இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பயம் இருக்கும். சிலருக்கு பேயைக் காணாமலே பயம்; சிலருக்கு நாயைக் கண்டால் பயம்; பலருக்கு மனைவியை நினைத்தாலே பயம். இப்படி பயமானது பல வகைப்படுகிறது.

June 24, 2012

உன் கல்லறையில் எச்சில் துப்புகிறேன் ( I SPIT ON YOUR GRAVE ) - ஒரு பாதிப்பு-


” ஒரு ஓவியன். ஒரு காட்சியைப் பார்க்கிறான். அந்த காட்சியை அப்படியே வரைவது ஓவியம் அல்ல. அந்த காட்சி அவன் மனதில் எழுப்பிய எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அவன் வரையும் ஓவியம் இருக்க வேண்டும் “ – பிக்காஸோ ( உலகப் புகழ் பெற்ற ஓவியர் ).

இந்த பதிவானது நான் இன்று பார்த்த ஒரு ஹாலிவுட் படத்தைப் பற்றியது. மேலே நான் மேற்கோள் காட்டியிருக்கும் பிக்காஸோவின் வரிகளை மீண்டும் வாசியுங்கள். அது ஓவியத்திற்கு மட்டுமல்ல. திரைப்படத்திற்கும்தான்.

June 18, 2012

அதீத மனிதர்கள் (Superhumans) - 1


 நம்மை படைத்தது யார்? கடவுளா ? அல்லது டார்வின் கூறுவது போல் இயற்கையா? இந்த கேள்வி உங்களில் பலருக்கு தோன்றியிருக்கக்கூடும். இது உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும், ஏன் இந்த உலகத்தில் மனிதன் தோன்றிய காலந்தொட்டே அவன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் மிக பழமையான விடைத் தெரியாத வினா இது. உலகெங்கும் கடவுளை எதிர்ப்பவர்களும், கடவுளை ஆதரிப்பவர்களும் கணிசமாக இருக்கின்றனர். எனினும் நம்மை தாண்டி நமக்கு கட்டுப்படாத ஒரு சக்தி இருப்பதை பெரும்பாலானோர் ( சில விஞ்ஞானிகள் உட்பட! ) ஒப்புக் கொண்டுள்ளனர்.

June 15, 2012

2 States - ஒரு பார்வை


“ Marriages are made in heaven “. இந்த கருத்தை ஆதரிப்பவரா நீங்கள் ? Chetan bhagat  எழுதிய  “ Two states; The Story Of My Marriage “ புத்தகத்தை ஒரு முறை படித்து பாருங்கள். உங்கள் கருத்து மாற நேரிடலாம். சரி. அதெல்லாம் இருக்கட்டும். இந்த புத்தகம் எதை பற்றியது ? கேள்வி எழுகிறதா ? மேற்கொண்டு தொடருங்கள்.


June 01, 2012

மனிதனும் மர்மங்களும்


மனிதனும் மர்மங்களும். இந்த புத்தகத்தைப் படித்து உள்ளீர்களா ? இல்லை என்பது உங்கள் பதிலாயிருந்தால் இந்த பதிவை வாசித்த பின்னர் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் அந்த புத்தகத்தை வாங்கி வாசிப்பதுதான். எனக்கு பிடித்த கிழக்குப் பதிப்பகமும், எனது வணக்கத்திற்குரிய எழுத்தாளர் மதன் அவர்களும் இணைந்த ஒரு புள்ளிதான் மனிதனும் மர்மங்களும்
 

May 31, 2012

வாழ்க தமிழ் !


நமது தாய்மொழி என்ன ? ” இதென்ன கேள்வி ! தமிழ்தான்என்று நீங்கள் பெருமையுடன் கூறலாம். இன்று தமிழ்நாட்டில் தமிழின் பெருமை பரவலாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. தமிழைக் காக்கவென்றே ஒரு கூட்டமும் இருக்கிறது. எனினும் நம்மில் எத்தனை பேர் தாய்மொழியான தமிழ் வழிக்கல்வியை ஆதரிக்கிறோம் ? எளிதாக எண்ண முடிந்த சிலரே.

May 30, 2012

இது ‘ஆனந்த’மான தருணம்...


மே 30, 2012. வரலாறு தன்னை மீண்டும் ஒருமுறை புதுப்பித்து கொண்டது. இந்தியாவிற்கு இதுஆனந்தமான தருணம். ’64 கட்டங்களின் அரசர்என்று அழைக்கப்படும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் தனது உலக சாம்பியன் அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார். தொடர்ந்து ஆனந்த் வெல்லும் நான்காவது பட்டம் இது.